Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 22 கோடியை எட்டுகிறது

செப்டம்பர் 25, 2021 06:25

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி சூடுபிடித்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் இதுவரை 84 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 26 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 62 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 393 ஆகும். 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 22 கோடியை நெருங்குகிறது. சரியாக 21 கோடியே 86 லட்சத்து 15 ஆயிரத்து 633 பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 72 லட்சத்து 20 ஆயிரத்து 642 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 41 லட்சத்து 99 ஆயிரத்து 612 பேர் முதல் டோசும், 30 லட்சத்து 21 ஆயிரத்து 30 பேர் இரண்டாவது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்